'குபேரா' இயக்குனருக்கு பேனா பரிசளித்த சிரஞ்சீவி | 'மாமன்' படத்தில் சுவாசிகா, பால சரவணனின் நடிப்பு: சூரி வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | சசிகுமாரின் 'பிரீடம்' படத்தின் டீசர் வெளியானது! | பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கர்மாவும், கடவுளும் பதிலடி கொடுக்கட்டும்! - பாடகி சின்மயி | ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை திருமணத்திற்கு அழைத்த நாகார்ஜுனா | விஜய் நடித்த 'லியோ' படப் பாடல் படப்பிடிப்பு: 35 லட்சம் முறைகேடு புகார் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தயாரிப்பில் பிரபல நிறுவனம் | ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது! யாரை சொல்கிறார் தனுஷ்? | ராஜா சாப் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு : டிச., 5ல் வெளியாகிறது | கமல் மன்னிப்பு கேட்கவில்லை; வேதனை அளிப்பதாக கடிதம் - கர்நாடகாவில் தக்லைப் ரிலீஸ் ஒத்திவைப்பு |
மலையாள திரையுலகில் இயக்குனராக நுழைந்து கோதா, மின்னல் முரளி உள்ளிட்ட படங்களால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர் பஷில் ஜோசப். அதேசமயம் சில படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து சமீபவருடங்களாக கதாநாயகனாக நடிக்கும் அளவிற்கு பிஸியான நடிகராக வளர்ந்து விட்டார் பஷில் ஜோசப். கடந்த வருடம் இவரது நடிப்பில் வெளியான குருவாயூர் அம்பல நடையில், சூட்சும தர்ஷினி, கிஷ்கிந்தா காண்டம், இந்த வருடம் வெளியான பொன் மான் உள்ளிட்ட படங்கள் வரவேற்பை பெற்றன. இதனை தொடர்ந்து அடுத்ததாக தற்போது இவர் நடித்துள்ள மரண மாஸ் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த படம் சவுதி அரேபியா குவைத் உள்ளிட்ட அரபு நாடுகளில் வெளியாக தடை விதிக்கப்பட்டுள்ளது.. காரணம் இந்த படத்தில் ஒரு திருநங்கை கதாபாத்திரம் இடம்பெற்றுள்ளது. இதனால் அரபு நாடுகளுக்கான சென்சாருக்கு அனுப்பப்பட்ட போது திருநங்கை சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கினால் படத்தை திரையிடலாம் என சொல்லப்பட்டது. ஆனால் படத்தில் ஒரு முக்கிய அம்சமாக அந்த திருநங்கை கதாபாத்திரம் இடம் பெற்றிருப்பதால் அந்த காட்சிகளை நீக்க படக்குழுவினர் தயக்கம் காட்டியுள்ளனர். அதனால் இன்று அரபு நாடுகளில் இந்த படம் வெளியாகவில்லை. இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிவப்பிரசாத் இயக்கியுள்ளார்.